Friday, June 24, 2011

வானம்

வானம்
எங்கு போய்
முடியும் என்பதை
யாராலும்
சொல்ல முடியாது
அந்த வகையில்
எங்கள் காதலும்
வானம் போலதான்

Thursday, June 9, 2011

"தோடு"

நேற்றுவரை
துன்பத்தோடு
துயரத்தோடு வாழ்ந்து
இன்று உன்
செவிகளை அடைந்தவுடன்
உல்லாசத்தோடு
உற்சாகத்தோடு
வாழ்வதனால் தான்
இதனைத்
"தோடு" என்கிறார்களோ ...?

அள்ளி வருகிறேன் காதலை.....

அவளைப்
பார்க்கச் செல்லும் போது
வெறும் கையோடுதான்
நான் செல்கிறேன்
வரும் போதோ
அல்ல முடியாமல்
அள்ளி வருகிறேன்
காதலை.....

Friday, May 27, 2011

நீ

நீ
புளிப்பு பிடிக்குமென்று
பலாப்பழம் முன்நின்று
மாங்காயைக்
கடிக்க ஆரம்பித்ததிலிருந்து
என் பெயர்
மாங்காய் என்று
பலாப்பழமும்
நடிக்க ஆரம்பித்துவிட்டது...

Tuesday, May 24, 2011

பிடிக்காது

தற்பெருமை பேசுவது
அவளுக்குச்
சுத்தமாக பிடிக்காது
வேண்டுமென்றால்
நிலவைப் புகழ்ந்து
ஒரு கவிதை
சொல்ல சொல்லுங்கள்
அவள்
எதுவுமே பேசமாட்டாள்

Monday, May 23, 2011

மறந்துவிடுகிறேன்...

உன்னை மறந்தால்தான்
எனக்கு தூக்கம்
வரும் போல் தெரிகிறது
பரவாயில்லை
மறந்துவிடுகிறேன்
தூக்கத்தை...

Sunday, May 22, 2011

நாம் இருவர் மட்டும்

எல்லாரும்
காதலால்
வாழ்ந்து கொண்டிருக்க
நாம்
இருவர் மட்டும் தான்
காதலை
வாழவைத்துக்
கொண்டிருக்கிறேம்

Friday, May 20, 2011

அழகு

உன்னை
வர்ணிப்பதற்காகதான்
நான்
கவிதைகளை எழுதுகிறேன்
முடிவில் என்
கவிதைகளை
வர்ணித்த்துவிடுகிறது
உன் அழகு

Thursday, May 19, 2011

என் கவிதைகளுக்கு இரண்டு காதலி

என் கவிதைகளுக்கு
இரண்டு காதலி
அற்புதமான
கவிதைகளுக்கு நீ
சுமாரான
கவிதைகளுக்கு
குப்பை தொட்டி

மின்னலை மிஞ்சும் மிஞ்சும் உன் பார்வை...





மின்னலை
மிஞ்சும்
மின்சாரத்தையும்
நான் கண்டதில்லை
உன் பார்வையை
மிஞ்சும்
மின்னலையும்
நான் கண்டதில்லை

Tuesday, May 17, 2011

உன் பார்வை



நீ விட்டெறிந்த
ஒவ்வொன்றையும்
நான்
சேமித்து வைக்கிறேன்
உன்
பார்வை உட்பட

கவிதை எழுதுவதற்குக் காத்திருந்தேன்


இத்தனை நாளாய்
நான்
கவிதை எழுதுவதற்குக்
காத்திருந்தேன்
இப்போது தான் புரிகிறது
உனக்காகக்
காத்திருப்பதே
ஒரு கவிதையென்று

Monday, May 16, 2011

மணிக் கணக்கில் மௌனமாகிறேன்



காதலை சொல்ல
ஒரு நொடி போதும்
இருப்பினும்
அவளைப் பார்க்கும் போது
மணிக் கணக்கில்
மௌனமாகிறேன்...

Sunday, May 15, 2011

கடந்த ஆண்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்



புத்தாண்டன்று
நீ எனக்கு
வாழ்த்துச்
சொல்லவே இல்லை
அதனால் தான்
நான் இன்னும்
கடந்த ஆண்டிலேயே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

Saturday, May 14, 2011

பரதக் கலை

முழுமையாக
நீ பரதம்
கற்றுக்கொள்ளவில்லை
என்றாலும்
நீ
ஆட ஆடத்தான்
அந்த பரதக் கலையே
முழுமையடைகிறது

Friday, May 13, 2011

என் இதயத்தை....



உன்னிடம்
எனக்குப்பிடித்ததே
அந்த
குழந்தைத்தனம்தான்
அதனால்தான்
உன் கையில்
பொம்மையாகக்
கொடுத்துவிட்டேன்
என் இதயத்தை....

ஒரு முழம் பூ என்ன விலை...

ஒரு முழம் பூ
என்ன விலை என்று
கேட்டுவிட்டு
பூக்கடைக்காரனிடம்
நீ பேரம் பேசுவது போல்...
உன்னிடம் பேரம் பேச
எனக்குத் தெரியாது
மொத்தமாக நானே
வாங்கிக் கொள்கிறேன்
சொல் ...
ஒரு கூடைக் காதல்
என்ன விலை ...?
வினோதன்

சமர்ப்பணம்


அன்னையைத் தவிர
வேறு யாரும்
தர முடியாத
தாய் பாலைப் போல்
என்னைத் தவிர
வேறு யாரும்
உணர முடியாத
அவள் உணர்வுகளுக்கு...
வினோதன்

Popular Posts