Friday, June 24, 2011

வானம்

வானம்
எங்கு போய்
முடியும் என்பதை
யாராலும்
சொல்ல முடியாது
அந்த வகையில்
எங்கள் காதலும்
வானம் போலதான்

Thursday, June 9, 2011

"தோடு"

நேற்றுவரை
துன்பத்தோடு
துயரத்தோடு வாழ்ந்து
இன்று உன்
செவிகளை அடைந்தவுடன்
உல்லாசத்தோடு
உற்சாகத்தோடு
வாழ்வதனால் தான்
இதனைத்
"தோடு" என்கிறார்களோ ...?

அள்ளி வருகிறேன் காதலை.....

அவளைப்
பார்க்கச் செல்லும் போது
வெறும் கையோடுதான்
நான் செல்கிறேன்
வரும் போதோ
அல்ல முடியாமல்
அள்ளி வருகிறேன்
காதலை.....

Friday, May 27, 2011

நீ

நீ
புளிப்பு பிடிக்குமென்று
பலாப்பழம் முன்நின்று
மாங்காயைக்
கடிக்க ஆரம்பித்ததிலிருந்து
என் பெயர்
மாங்காய் என்று
பலாப்பழமும்
நடிக்க ஆரம்பித்துவிட்டது...

Tuesday, May 24, 2011

பிடிக்காது

தற்பெருமை பேசுவது
அவளுக்குச்
சுத்தமாக பிடிக்காது
வேண்டுமென்றால்
நிலவைப் புகழ்ந்து
ஒரு கவிதை
சொல்ல சொல்லுங்கள்
அவள்
எதுவுமே பேசமாட்டாள்

Monday, May 23, 2011

மறந்துவிடுகிறேன்...

உன்னை மறந்தால்தான்
எனக்கு தூக்கம்
வரும் போல் தெரிகிறது
பரவாயில்லை
மறந்துவிடுகிறேன்
தூக்கத்தை...

Sunday, May 22, 2011

நாம் இருவர் மட்டும்

எல்லாரும்
காதலால்
வாழ்ந்து கொண்டிருக்க
நாம்
இருவர் மட்டும் தான்
காதலை
வாழவைத்துக்
கொண்டிருக்கிறேம்

Popular Posts